அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

DECEMBER 2016 SSLC TIME TABLE09.12.2016   FRIDAY    LANGUAGE PAPER - I
10.12.2016   SATURDAY   LANGUAGE PAPER – II14.12.2016  WEDNESDAY   ENGLISH PAPER – I15.12.2016  THRUSDAY   ENGLISH PAPER –II17. 12.2016  SATURDAY   MATHEMATICS19. 12.2016    MONDAY  SCIENCE
21. 12.2016 WEDNESDAY  OPTIONAL LANGUAGE
23. 12.2016  FRIDAY  SOCIAL SCIENCE

DURATION:
10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper
        
10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer  sheet
              10:15 a.m. to 12:45 p.m - Duration of Examination


HIGHER SECONDARY +2 HALF YEARLY COMMON  EXAMINATIONS
DECEMBER 2016 TIME TABLE
07.12.2016  WEDNESDAY   PART - I  LANGUAGE PAPER – I
08.12.2016  THURSDAY  PART – I  LANGUAGE PAPER – II
09.12.2016  FRIDAY  PART - II  ENGLISH PAPER - I
10.12.2016  SATURDAY  PART – II ENGLISH PAPER - II
14.12.2016 WEDNESDAY PART - III
MATHEMATICS / MICRO BIOLOGY / ZOOLOGY / NUTRITION &DIETETICS/ TEXTILES DESIGNING / FOOD MANAGEMENT & CHILD CARE / AGRICULTURE PRACTICE / POLITICAL SCIENCE / NURSING (VOCATIONAL) / NURSING (GENERAL) / ACCOUNTANCY & AUDITING (THEORY)
15.12.2016 THURSDAY  PART -III
COMMERCE / HOME SCIENCE/ GEOGRAPHY
16.12.2016  FRIDAY  PART - III
COMMUNICATIVE ENGLISH/ INDIAN CULTURE/ COMPUTER SCIENCE / BIO CHEMISTRY / ADVANCED LANGUAGE (TAMIL) /  STATISTICS
19.12.2016  MONDAY  PART –III
PHYSICS / ECONOMICS / GENERAL MACHINIST / ELECTRONICS EQUIPMENT / DRAUGHTSMAN CIVIL / ELECTRICAL MACHINES AND APPLIANCES / AUTO MECHANIC/ TEXTILE TECHNOLOGY/ OFFICE MANAGEMENT
21.12.2016 WEDNESDAY PART –III
CHEMISTRY / ACCOUNTANCY
23.12.2016 FRIDAY PART –III
BIOLOGY / BOTANY / HISTORY/ BUSINESS MATHEMATICS
Practical Examinations should be conducted under the General and Vocational streams including Typewriting (Tamil & English) before the commencement of Half yearly Common Examinations.
Duration  :10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper
      10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer sheet
     10:15 a.m. to  01:15p.m - Duration of Examination


நவ., 17ல் ஆர்ப்பாட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: அகவிலைப்படி உயர்வுக் கோரி, தமிழகம் முழுவதும், நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுக் கோரி, மனுக்கள் அளித்துள்ளோம்; அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எட்டாவது ஊதியக் குழுவை ஏற்படுத்துதல், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைத்தல், தேர்வு பணிகளுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்து மாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண் வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்வி உதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார் எண் இல்லா தோர், முகவரி அடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் : பள்ளி கல்வித்துறை

 காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.8 தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது

 எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. இடையில் 13-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) பக்ரீத் விடுமுறை விடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.
எஸ்எஸ்எல்சி தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.10 (சனி) - மொழித்தாள்-2
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் முதல்தாள்
செப்.14 (புதன்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.16 (வெள்ளி) - கணிதம்
செப்.19 (திங்கள்) - அறிவியல்
செப்.21 (புதன்) - விருப்ப மொழி
செப்.23 (வெள்ளி) - சமூக அறிவியல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகளும் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
பிளஸ் 2 தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.9 (வெள்ளி) - மொழித் தாள்-2
செப்.10 (சனி) - ஆங்கிலம் முதல் தாள்
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.14 (புதன்) - வணிகவியல், மனையியல், புவியியல்
செப்.15 (வியாழன்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.16 (வெள்ளி) - இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.19 (திங்கள்) - இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்
செப்.21 (புதன்) - வேதியியல், கணக்குப்பதிவியல்
செப்.23 (வெள்ளி) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.
எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.