7-வது ஊதியக்குழு பரிந்துரை ஆராய உயர்நிலைக் குழு

புதுடெல்லி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக முடிவெடுப் பதற்காக அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத் துள்ளது. 7-வது ஊதியக்குழு தன் பரிந்து ரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்து ரைகளை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை பரிசீலனை செய்ய, செயலாளர்கள் அளவிலான குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், 2016-17ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும்’’ என்றார்.