அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது.
பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாகதேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில்நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்&' எனஅரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதனால்,அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே,சென்டம் பெறலாம் என்ற நிலை உள்ளது.
அதற்கு முன்னோட்டமாகஅரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என,தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்குநேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில்புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள்முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிரபாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இந்த கேள்விகளுக்குவகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்ததுபிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில்இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது. எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில்நான்கு மதிப்பெண்ணில்ஒரு கேள்விஒரு மதிப்பெண்ணில்ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்குமொத்தம், 10 கேள்விகள்,புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.
இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில்நான்கு மதிப்பெண்ணில்இரண்டு கேள்விகள்இரண்டு மதிப்பெண்ணில் ஆறுஒரு மதிப்பெண்ணில் நான்குஎட்டு மதிப்பெண்ணில் ஒன்று எனமொத்தம், 32மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தகுதியான மாணவர்கள் மட்டுமே சென்டம் பெற வேண்டும் என கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தை வரவேற்கிறோம். புத்தகம் முழுவதையும் ஆசிரியர்களால் பாடம் நடத்த முடிவதில்லை. அதனால்பயிற்சி நாட்களை காலாண்டுக்கு முன்பே வைத்து கொண்டுவகுப்பு நாட்களை அதிகப்படுத்தினால் தான் மாணவர்களை புதிய முறைக்கு தயார்படுத்த முடியும். இளங்கோதமிழக உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்ட நிர்வாகி.