பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
தேர்வெழுதிய மாணவர்களில் 91.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 90.6% ஆக இருந்தது.
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய 8,76,136  மாணவ, மாணவிகளில் 7,61,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4,99,463 மாணவர்கள் 60%க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.