பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

முதன்மைக்கல்வி அலுவலர் வாசு கூறுகையில்,“ அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் கவனம் செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்,”என்றார்.