தமிழில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்

பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இருவரும் 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நாமக்கல் கிரின் பார்க் பள்ளி மாணவி ஜெனிபர் ஜெயநந்தினி தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே பள்ளியை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார். அவர் 1182 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.