ஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளிப்படையாகக் கூறி ஓட்டளிக்கச் சென்றால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.-தேர்தல் கமிஷன்

'ஓட்டுச்சாவடியில் சின்னத்தை வெளிப்படையாக கூறுவோரை, ஓட்டளிக்க
அனுமதிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவு விவரம்: தேர்தல் கமிஷனின், '49 ஓ' விதிமுறைப்படி, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதோர் 'நோட்டா'விற்கு ஓட்டளிக்கலாம். இதற்காக இந்த தேர்தலில், நோட்டாவிற்கென தனி சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், '49 எம்' விதிமுறைப்படி ஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளிப்படையாகக் கூறி ஓட்டளிக்கச் சென்றால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது