10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநிலமாவட்ட அளவிலும்அதிக மதிப்பெண் பெற்றுமுதல் மூன்றுரேங்க்களை பெறுகின்றனர்.
ஆனால்இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ,மாணவியர் உட்படஅதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர்பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது. குறிப்பாககணிதம் மற்றும் உயிரியலில்,மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாகபள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்துஆசிரியர்கள் கூறியதாவது: 
பத்தாம் வகுப்பு முடித்துபிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர்அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால்பிளஸ் 1ல் திணறுகின்றனர். இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்டஅதிகாரிகள் உத்தரவிடுவதால்ஆசிரியர்கள்தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப,மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். 
மேலும்விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால்ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல்,திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்துதேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை,ஆசிரியர்கள்வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும் என்றனர்.