ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்!

தொடக்க பள்ளிகளில்மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கானவிருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்இன்று துவங்குகிறது. 
முதல் நாளான இன்றுஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளைநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, 6ம் தேதிபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான்ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகிஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 
இதேபோலஇடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும்தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாககடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆண்டுகாலி இடங்களை மறைத்து,அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது எனஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.